Monday, 7 May 2018

இதனால தான் இந்தியாவுக்கு இவர் ‘தல’யாக இருக்காரு: ரவிந்திர ஜடேஜா

புதுடெல்லி: ‘வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு தனிநபரை தோனி கைகாட்டுவதில்லை. அதனால் தான் இந்திய ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடுகின்றனர்,’ என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவிந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது. 

இதில் புனேவில் நடந்த லீக் போட்டியில் 35வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இந்நிலையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளத். இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை வீரர் ரவீந்திர ஜடேஜா, இரண்டு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இருந்தாலும், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், ரவிந்திர ஜடேஜாவுக்கு தோனி மீண்டும் வாய்ப்பு அளித்தார்.



இப்பிடியா படம் எடுப்பது? பணம் சம்பாதிக்க பல வழி இருக்கு.. கடுப்பான பாரதிராஜா

சென்னை : இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு எதிராகக் இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார் .

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் வெளியாகி ஓடிக்கொண்டுள்ளது. அடல்ட் காமெடி படமான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்துக்கு சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தில், ஆபாச வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.இந்நிலையில், இந்த மாதிரியான படங்கள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும். என என இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார் .

அதில், ‘திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள் கொண்டுவர முடியும் என்றார்கள். சில தரம்கெட்ட திரைப்படங்களால் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. இலக்கியம், இதிகாசம், சராசரி மனித வாழ்க்கையைக் கொண்டாடிய நம் திரைப்படங்கள், இன்று சதையை மட்டுமே கொண்டாடுகின்றன.



சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள், இன்று இரட்டை அர்த்த வசனங்களால் மலிந்துபோய்க் கிடக்கின்றது. இலைமறை காயாக சொல்லப்பட்ட விஷயங்களை, இன்று இலைபோட்டுப் பரிமாறுகிறார்கள். தாழ்ந்த உருவாக்கங்களால் தலைகுனிகிறது நம் திரைப்படத்துறை. 

தமிழ் மக்களே... ரசனை மாற்றமென்று தரம்கெட்டுப் படைக்கும் படைப்புகளைப் பார்ப்பதைப் புறக்கணியுங்கள். சமீபத்தில் வெளியான முடை நாற்றமடிக்கும் ஒரு திரைப்படம், நம் தமிழ்நாட்டு இளைஞர்களைத் திசைதிருப்பி, நம்முடைய ரசனையை மழுங்கடித்து, தற்போதைய தமிழகத்தின் பிரச்சினைகளை மறக்கச் செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இவர்களுக்குத் துணை போவதால் தான், ஆபாசமான திரைப்படங்களுக்கும் தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கிறது. காரணம், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு தெரியாதவர்கள் பதவியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும். ஏன்... இதற்கு மேலேயும் நடக்கும். இதற்கு ஒரு முடிவுகட்ட நாள் குறிக்க வேண்டும். 

இது ஒருபக்கம் இருக்கட்டும்... மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சென்சார் போர்டு என்ன செய்து கொண்டிருக்கிறது? சரியான விஷயங்களுக்குக் கூட கத்திரி போட்ட நீங்கள், சமீப காலமாக ஆபாசப் படங்களுக்கு அனுமதி அளிப்பது ஏன்? எவ்வளவோ காலங்களாய் அடங்கிக் கிடந்த தமிழ் இனம், தற்போது பிரச்சினைகளைக் கண்டு வீறுகொண்டு நிமிர்ந்து நிற்க முயற்சி செய்யும்போது, எங்களை பலவீனப்படுத்த நீங்கள் செய்யும் சூழ்ச்சியோ என்றுகூட சந்தேகப்படுகிறேன். 

ஆபாசத் திரைப்படங்களைப் படைக்கும் படைப்பாளர்களே... நீங்கள் எடுக்கும் திரைப்படங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? சற்று சிந்திப்பீர். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்கு திரை ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல... அது எழுதப்பட்ட வாழ்க்கை என்பதை உணருங்கள். மத்திய தணிக்கைக்குழு அதிகாரிகளே... இரண்டாம் தரமான படைப்புகளை மறு பரிசீலனை செய்யுங்கள். இல்லையென்றால், சென்சாரையே சென்சார் செய்யவேண்டிய நிலை ஏற்படும்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. 



இறந்தும் 8 பேருக்கு வாழ்வளித்த பெண்

திருப்பூர் : சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோமதி என்ற பெண்ணின் uடல் உறுப்புகளால் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், செம்மி பாளையத்தைச் சேர்ந்தவர் கோமதி. கடந்த 4ம் தேதி வேலைக்கு சென்று திரும்பும்போது விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து அவரின் உடல் உறுப்புக்களான கல்லீரல், சிறுநீரகம், இதயம்,எலும்பு மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புக்கள் கோவை, சென்னை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பபட்டுள்ளது.இதன் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

விளக்கெண்ணையோட ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் என்ன ஆகும்னு தெரியுமா?

ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி ஒரு தேக்கரண்டி அளவு கொடுப்பார்கள். அதனாலேயே பலருக்கும் அதன் மேல் வெறுப்பு உண்டு. ஆனால் ஊட்டச்சத்துள்ள இது டானிக் போன்று நமக்கு ஆரோக்கியமான விளைவுகளை கொடுக்கும். நம் முன்னோர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலமிளக்கியாகவும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சுலபமாக பிரசவிக்கவும் இதனை உபயோகப்படுத்தி உள்ளனர்.
அதிலுள்ள பயனுள்ள மூலக்கூறு அமைப்பை விஞ்ஞானிகள், இப்போதுதான் தெளிவுபடுத்தியுள்ளனர். இதில் 90 சதவீதம் உள்ள ரிஸினோலெயிக் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சேர்ந்து கருப்பை மற்றும் குடலில் ஒரு நல்ல ஊக்கியாக செயல்படுவதை கண்டறிந்துள்ளனர். தேவையில்லாத மருந்துகளை விட விளக்கெண்ணெய் மிக அற்புதமாக செயல்படுவதை விளக்கியுள்ளனர்.
2 ஸ்பூன்
தினமும் ஒரு தேக்கரண்டி நீர்த்த விளக்கெண்ணெய் குடிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மாற்று மருந்து கடைகளில் விரும்பத்தகாத சுவையில் உள்ள இந்த திரவத்தை மலமிளக்கியாக விற்கின்றனர். உணவு மற்றும் சுகாதாரத்துறை அமைப்பான எப்.டி.ஏ விளக்கெண்ணெயை பாதுகாப்பானதாகவும் பக்க விளைவுகளற்றதாகவும் வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அதன் நுட்பத்தை ஆராய்ச்சியாளர்களால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆராய்ச்சி
“நாம் பழைய கால பாட்டி வைத்தியம் போன்றவற்றை பற்றி படிக்கும் போது அவற்றிலிருந்து நிறைய கற்றுக் கொள்கிறோம்” என்று ஜெர்மனியில் உள்ள மாக்ஸ் பிளாங்க் இதய நுரையீரல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த உயிரியலாளரான ஸ்டீபன் ஆஃபர்மன் சொல்கிறார். இங்கு மிகவும் ஆச்சரியமான ஒன்று என்னவென்றால் விளக்கெண்ணெய் வேலை செய்யும் விதம் ஆகும். ஆஃபர்மன் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள், செல்லுலார் ரிஸப்டார்களுடன் பிணையக்கூடிய பல்வேறு கொழுப்பு அமிலங்களை ஆராய்ந்து பார்த்த போது ரிஸினோலெயிக் அமிலத்தில் அவர்கள் எதிர் பார்த்த பலன்கள் கிடைத்தன.
பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவத்தில் விளக்கெண்ணெயின் உபயோகம் அதிகமாக இருந்துள்ளதை கண்டு, அவர்கள் அதன் மூலக்கூறை விரிவாக ஆராய முடிவு செய்தனர். செல்லுலார் ரிஸப்டார்களை தடுக்கக்கூடிய, மாலிகுலார் லைப்ரரியில் உள்ள பல்வேறு மூலக்கூறுகளை ஆராய்ந்த போது, ரிஸினோலெயிக் அமிலம் EP 3 மற்றும் EP 4 ரிஸப்டார்களுடன் இணைவதை கண்டுபிடித்தனர். இரண்டும், நியூரான்களின் அமைப்பை மாற்றுவது முதல் ரத்தத்தை உறைய வைப்பது வரை உடலில் பல்வேறு செயல்களை செய்யும் புரோஸ்டாகிலான்டின் ரிஸப்டார்கள்.
பயன்கள்
எலிகளில் சோதனை செய்த போது ரிஸினோலெயிக் அமிலம் EP3 உடன் வினையாற்றி மலமிளக்கி மற்றும் பிரசவ கால வலியை தூண்டுவது தெரிந்தது. ஒருவர் விளக்கெண்ணையை விழுங்கும் போது அதிலுள்ள ரிஸினோலெயிக் அமிலம் EP3 உடன் வினை புரிந்து சிறு குடலின் சுவற்றில் உள்ள மென்மையான தசை செல்களை சுருங்கச்செய்து மலமிளக்கியாக செயல்படுகிறது. இதேபோல ரிஸினோலெயிக் அமிலம் கருப்பையில் உள்ள EP3 உடன் வினைபுரிந்து அது சுருங்குவதற்கு காரணமாகிறது. இந்த அணி அதன் முடிவுகளை தேசிய அறிவியல் கழகத்தின் செயல்முறைகளில் வெளியிட்டது.
“விளக்கெண்ணெய் செயலாற்றும் விதம் அதன் நச்சுத்தன்மை, தண்ணீர் மற்றும் எலெக்ட்ரோலைட் மீது ஆற்றும் வினைகள் பற்றி பல கோட்பாடுகள் உள்ளன என்று ஆஃபர்மன் குழு சொல்கிறது. ஆனால் இந்த ரிசெப்டர் தசைகள் சுருங்குவதற்க்கு எவ்வாறு காரணமாகிறது என்பது இன்னும் கண்டுபிக்கப்படவில்லை. குடல், கருப்பை மற்றும் EP 3 க்கு உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்ய இந்த தொடர்பு ஊக்குவிப்பதாய் உள்ளது.
மலமிளக்கி
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த பிலிப் பென்னட் “அவர்கள் இந்த ஆராய்ச்சியை நேர்த்தியாகவும், முழுமையாகவும் செய்துள்ளனர்” என்கிறார். ஒரு கட்டத்தில் இது ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருப்பது போல் தோன்றினாலும் அதை விட அதிகமான முடிச்சுகள் அவுக்கப்படாமல் உள்ளன. ரிஸினோலெயிக் அமிலம் EP3 உடன் பிணைக்கப்படுவது ரெசெப்டர்களை இலக்காக கொண்ட மருந்துகளை வடிவமைக்க உதவுகிறது என்று குறிப்பிடுகிறார். அத்தகைய மருந்துகள் மலமிளக்கியாகவும், பிரசவ கால வலி தூடியாகவும் போன்றவற்றுக்காக பயன்படும்.
வாந்தி மயக்கம் போன்ற பக்கவிளைவுகள் இல்லாத மருந்தாகவும் இருக்கும். நவீன மருத்துவம் இதனை இன்னும் முழுமையாக ஆதரிக்காவிட்டாலும், தினமும் விளக்கெண்ணெயை விலக்காமல் எடுத்துக்கொண்டால், மருத்துவ செலவு மிச்சமாகும். மேலும் இது தோல் நோய்கள், வலி, தொற்று நோய்களை சரி செய்கிறது. எனவே தினமும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையை துளி உப்பு அல்லது சர்க்கரையுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.

தூக்கத்தில் மறந்து பெண் செய்த காரியம்… பரிதாபமாக பலியான சோகம்

இரவில் காதில் ஹெட்போன் மாட்டிய படி தூங்கிய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கணத்தூர் பகுதியில் வசிப்பர் பாத்திமா(45). இவர் கடந்த சனிக்கிழமை இரவு தூங்கும் போது காதில் ஹெட்போன் மாட்டி பாட்டு கேட்ட படியே தூங்கிவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் கணவர் அவரை எழுப்பிய போது அவர் எழவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரின் கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பாத்திமாவை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சந்தேகம் மரணம் என்பதால் இதுகுறித்து பொலிசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. எனவே, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் பாத்திமா மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
இரவின் செல்போனில் பாடல்கள் கேட்டுக் கொண்டே ஹெட்போனை கழட்டாமல் தூங்கியதால் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது

இதனால தான் இந்தியாவுக்கு இவர் ‘தல’யாக இருக்காரு: ரவிந்திர ஜடேஜா

புதுடெல்லி: ‘ வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு தனிநபரை தோனி கைகாட்டுவதில்லை. அதனால் தான் இந்திய ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடுகின்றன...