Friday, 6 April 2018

இந்த ஒரு பொருள் சிறுநீரக பாதிப்புகளை சரிசெய்யும் என்பது தெரியுமா

நமது கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் காணப்படும் ஒரு தொன்மையான காய் வகை, சுரைக்காய். கொடிகளில் படரும் தன்மையுள்ள சுரைக்காயின் இலை, பிஞ்சு, காய் மற்றும் பழங்கள் மனிதர்க்கு நன்மையளிப்பவை. வீடுகளின் கூரைகளில், வேலிகளின் மேல், அல்லது தரையில் எங்கும் பரவி வளர்பவை, சுரைக்காய்.
சுரைக்காய் பெரிய நீர்க்குடுவை போன்ற வடிவத்தில் இருப்பதால், நன்கு முற்றிய சுரைக்காயின் உள்ளே உள்ள சதைப்பகுதிகளை நீக்கி, அவற்றை வெயிலில் காய வைத்து, அக்காலங்களில் நீரை சேமிக்க, மற்றும் வைத்தியர்களின் மருந்துகளை சேகரித்து வைக்க, வெளியூருக்கு எடுத்துச்செல்ல, பயன்படுத்தி வந்தனர். இந்த சுரைக்காய் குடுவை பொருளை சேமிக்க மட்டுமல்லாமல், பொருள்களை நீண்ட காலம் கெடாமல், பாதுகாக்கும் தன்மையும் மிக்கது.
கிராமங்களில் நாட்டுக்காய்கள் என்று சில காய்கறிகளை, குறிப்பிடுவார்கள், அதில் சற்று விலையில் குறைந்தது இந்த சுரைக்காய், ஆயினும் உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியது.
கிராமங்களில் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, சிறுவர்கள் அல்லது அந்த பேச்சுக்கு தொடர்பு இல்லாதவர்கள் அவர்களிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்கும்போது, “சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்று சொன்னேன்” என்று குறும்பாக, பதில் சொல்வார்கள்.
எங்கள் பேச்சில் நீங்கள் குறுக்கிடவேண்டாம், மேலும், எங்களுக்கு, உங்களை பேச்சில் சேர்த்துக் கொள்ள விருப்பம் இல்லை என்பது, இதற்கு பொருள். அதை உணர்ந்து அவர்களும், விலகிச் சென்று விடுவர்.
புரோட்டின், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் தாதுக்கள் அதிகம் உள்ள சுரைக்காய்களில், மிக அதிக அளவில் நீர்ச்சத்தும் உள்ளதால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகிறது. உடல் சூட்டை தடுத்து, உடலை கோடைக்கால வெப்ப வியாதிகளில் இருந்து காக்கிறது
இதர நன்மைகள்
  • பெண்களின், இரத்த சோகை வியாதியை போக்கி, இரத்தத்தை சுத்திகரிக்கும் அருமருந்தாக, சுரைக்காய் ஜூஸ் விளங்குகிறது.
  • சுரைக்காய் தேன் கலந்த ஜுஸ், உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து, இரத்த ஓட்டத்தை சமமாக்கி, உடலின் சீரான இயக்கத்திற்கு, வழி செய்கிறது.
  • உடலில் வெளியேறாமல் தேங்கும் சிறுநீரை வெளியேற்றி, சிறுநீரக நச்சுத் தொற்றுகள், கற்கள் மற்றும் சிறுநீரகத்தை தூய்மை செய்து, சிறுநீரகத்தை காக்கிறது.
  • சுரைக்காய் ஜூஸ் கல்லீரல் நோயை சரியாக்கும் ஆற்றல்மிக்கது, வயிற்றில் புண்களை ஏற்படாமல் காக்கும் தன்மை மிக்கது, மேலும், மன அழுத்தத்தை குறைத்து, மன இறுக்கத்தை சரியாக்குகிறது.
  • நலன்கள் பல நமக்கு தந்தாலும், சுரைக்காயை ஒருபோதும், பச்சையாக சாப்பிடக்கூடாது, பெரிய வயிறு உள்ளவர்கள், குரலை காக்க வேண்டிய பாடகர்கள் யாவரும், சுரைக்காயை உணவில் தவிர்க்க வேண்டும், அது போல, பெண்களின் மாத விலக்கின் போது சுரைக்காயை உணவில் தவிர்க்க வேண்டுமென, வைத்திய சாத்திரங்கள் சொல்கின்றன.


No comments:

Post a Comment

இதனால தான் இந்தியாவுக்கு இவர் ‘தல’யாக இருக்காரு: ரவிந்திர ஜடேஜா

புதுடெல்லி: ‘ வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு தனிநபரை தோனி கைகாட்டுவதில்லை. அதனால் தான் இந்திய ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடுகின்றன...